மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 'நம்ப முடியாத' பலத்துடன் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டுபிளசிஸ் பாராட்டியுள்ளார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இரண்டு ஆண்ட்ரே ரஸ்ஸல்ஸுக்கு சமமான வீரர் அணியில் இருப்பதாக தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரூதர்ஃபோர்டு, தற்போது சிறந்த டி20 பினிஷர்களில் ஒருவர். 2026-ல், எட்டு டி20ஐ இன்னிங்ஸ்களில் 186.4 ஸ்ட்ரைக் ரேட்டில் கிட்டத்தட்ட 250 ரன்கள் குவித்து அசத்தினார். மற்ற டி20 போட்டிகளிலும் அவர் தொடர்ந்து 150-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வருகிறார்.

2026 ஏலத்திற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அவரை வெறும் ₹2.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸிடம் டிரேட் செய்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதன் மூலம், 2025இல் ஐந்து முறை சாம்பியனான மும்பை எதிர்கொண்ட ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வுகண்டது.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸில் வில் ஜாக்ஸ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் முடிந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் மிகவும் மதிப்புமிக்க வீரராக உருவெடுத்த பிறகு, இந்த முறை அவர் வேறு ஒரு வீரராக இருப்பார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அத்தொடரில் ஜாக்ஸ் 226 ரன்கள், 176.56 ஸ்ட்ரைக் ரேட் உடன் ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
டூ பிளெஸ்ஸிஸ் இது குறித்து பேசியபோது, "நீங்கள் ரூதர்ஃபோர்டை கடந்த ஆண்டு கவனித்திருந்தால், டி20 கிரிக்கெட்டில் அவர் எட்டக்கூடிய உச்சத்தை அடைந்திருந்தார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பந்தை அடித்து நொறுக்குகிறார்," என்று குறிப்பிட்டார்.
"அடுத்து, ஜாக்ஸ் இருக்கிறார். அவர் வெறும் தொடக்க வீரராக இருந்து மாறி, போட்டி முடிக்கும் திறனையும், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சையும் சேர்த்துள்ளார். இவர்களைப் பார்ப்பது, இப்போது உங்கள் அணியில் இரண்டு ரஸ்ஸல்ஸ் இருப்பதைப் போன்றது. அவர்களின் அணி நம்ப முடியாததாகத் தெரிகிறது," என்றார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை கொல்கத்தா நைட் ரைடர்ஸில் கழித்தார். இந்த ஆண்டு பயிற்சியாளராக இணைந்த அவர், ஐபிஎல் வரலாற்றின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.2024 ஆம் ஆண்டு வரை, ரஸ்ஸல் கேகேஆருக்கு ஒரு அபாரமான பேலன்ஸை தந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடி பினிஷராகவும், நான்கு ஓவர்களை வீசக்கூடியவராகவும் இருந்தார். ஐபிஎல் 2026 சீசனைத் தொடங்க கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.