Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறாரா வைபவ் சூர்யவன்ஷி? ராஜஸ்தான் அணியை எச்சரித்த பிராட்

மும்பை: ஐபிஎல் களத்தில் 15 வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மிரளச் செய்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரு இளம் வீரருக்காக ஐபிஎல் தொடரின் இரு பெரும் அணிகளுக்கு இடையே இத்தனை பெரிய மோதல் நடக்குமா என்ற கேள்வி இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "வைபவ் சூர்யவன்ஷியை 14 வயதிலேயே அடையாளம் கண்டு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் அணியின் ஸ்கவுட்டிங் முறையைப் பாராட்ட வேண்டும். ஆனால், அவரை 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கட்டிப்போட முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வைபவ் எப்போது வேண்டுமானாலும் மும்பை இந்தியன்ஸ் போன்ற பெரிய அணிகளுக்கு மாற வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

IPL 2026 Will Vaibhav Suryavanshi Move to Mumbai Indians for 30 Crore Stuart Broad Warns Rajasthan Royals

ஒருவேளை வைபவ் மீண்டும் ஏலத்திற்கு வந்தால், ஐபிஎல் வரலாற்றில் 30 கோடி ரூபாயைத் தாண்டிய முதல் வீரராக அவர் உருவெடுப்பார் என்றும் பிராட் கணித்துள்ளார். ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைக் கண்டு தான் வியந்து போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 15 வயதிலேயே ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசுவது என்பது சாதாரண காரியம் அல்ல.

"கிறிஸ் கெய்ல் மற்றும் வீரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான்கள் தங்களது 30 அல்லது 35 வயதில் காட்டிய அந்தப் பயமற்ற ஆட்டத்தை, வைபவ் இப்போது 15 வயதிலேயே காட்டுகிறார். ராஜஸ்தான் அணி விளையாடும்போது வைபவ் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதற்காகவே நான் தொலைக்காட்சியை ஆன் செய்கிறேன்" என்று ஜோஸ் பட்லர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதுவரை சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரை மட்டுமே அடையாளமாகக் கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை வைபவ் ஒருவரே ராஜஸ்தான் அணிக்கு ஈட்டித் தந்துள்ளார்.

கடந்த 2025 மெகா ஏலத்தில் 1.1 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட வைபவ், இன்று அந்த முதலீட்டை விட பல மடங்கு லாபத்தை அணிக்குத் தந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஜாம்பவானாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி, வரும் காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தாவினால், அது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக அமையும்.

Story first published: Wednesday, April 29, 2026, 22:57 [IST]
Other articles published on Apr 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+