
யுவராஜ் விலை 16 கோடி:
நேற்று நடந்த 8வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ஐபிஎல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூபாய் 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதுகுறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறப்பான வீரர்:
" யுவராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவரது கடந்து வந்த பாதையைப் பாருங்கள். மிகச் சிறப்பான வீரர் அவர்.

உலகக் கோப்பை தொடர் நாயகன்:
2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது அவர் தான் தொடர் நாயகன். பின்னர் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிறகு மீண்டு வந்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளார்.

திறமை மேல் நம்பிக்கை:
அவருக்கு தற்போது 32 வயதாகிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

ரசிகர்களால் நிரப்புவார்:
யுவராஜ் சிங் தனது ஆட்டத்தின் மூலம் டெல்லி மைதானத்தை ரசிகர்களால் நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம். அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்ப்போம்" என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

போன முறை 14 கோடி:
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஏலத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ரூபாய் 14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த தொடரில் யுவராஜ் சரியாக ஆடவில்லை.

பெங்களூரு போய் டெல்லி வந்துச்சு:
இதனால் பெங்களூர் அணி அவரை கழற்றி விட்டு விட்டது. இதையடுத்து தற்போது அவரை டெல்லி வாங்கி விட்டது. அதுவும் மிகப் பெரிய சாதனை விலைக்கு.


Click it and Unblock the Notifications











