For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி.. கோடிக்கணக்கில் கேட்கும் அணிகள்

ஜெய்ப்பூர் : 2019 இந்தியன் பிரீமியர் லீக்-கிற்கான ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் 2019க்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த முறை ஏலம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும். ஏற்கனவே, பெங்களூருவில் ஏலம் நடப்பதாக கூறி இருந்த நிலையில், அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர்களுக்கு எப்போதும் போல கடும் கிராக்கி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலர் சொந்த நாட்டுக்கு ஆடுவதை கூட விட்டு விட்டு டி20 தொடர்களில் மட்டுமே ஆடி வருகின்றனர். அதே சமயம், அவர்கள் அதிரடி வீரர்களாகவும் இருக்கின்றனர்.

கடும் போட்டி நிலவியது

கடும் போட்டி நிலவியது

அதனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு எப்போதும் போட்டி நிலவும். இந்த முறையும் கடும் போட்டி நிலவியது. வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டன் கார்லோஸ் ப்ராத்வைட் 5 கோடிக்கு ஏலம் போனார். மற்ற வீரர்களுக்கும் பல அணிகள் கோடிக்கணக்கில் ஏலம் கேட்டன.

பாதியில் கிளம்ப உள்ள வீரர்கள்

பாதியில் கிளம்ப உள்ள வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இப்படி என்றால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இந்த முறை உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் பாதியில் கிளம்பி விடுவார்கள் என் கூறப்படுகிறது. அதனால், அந்த வீரர்களை வாங்க எந்த அணியும் தயாராக இல்லை.

யுவராஜ் பரிதாப நிலை

யுவராஜ் பரிதாப நிலை

அதே போல இந்திய வீரர்கள் பலருக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை. இந்திய வீரர் யுவராஜ் சிங்கை எந்த அணியும் வாங்கவில்லை. சிஎஸ்கே அணி வாங்கும் என முன்பு கூறப்பட்ட நிலையில், யாரும் யுவராஜ் சிங்கிற்கு ஏலம் கேட்கவில்லை.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Tuesday, December 18, 2018, 17:01 [IST]
Other articles published on Dec 18, 2018
English summary
IPL auction 2019 - IPL Teams running after West Indies players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X