சென்ற ஆண்டு ஏலம்
ஜெயதேவ் உனட்கட் சென்ற ஆண்டில் 11.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டு பல வீரர்களை பொறாமையில் மூழ்க வைத்தார். அத்தனை விலைக்கு வாங்கப்பட்டும் சென்ற ஐபிஎல் சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மற்ற அணிகள் திட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயதேவை விடுவித்ததற்கு இது தான் காரணம் என கருதப்பட்டது. அதனால், இந்த முறை ஜெயதேவ் உனட்கட்டை வாங்க மற்ற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ட்விஸ்ட் வைத்த ராஜஸ்தான்
ஆனால், ஜெயதேவ் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் டெல்லி அணியுடன் போட்டி போடத் துவங்கியது ராஜஸ்தான். பின்னர் டெல்லி அணி பின் வாங்கியது. அடுத்து சென்னை மற்றும் பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு ஜெயதேவை 8.40 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான்.
இப்படியும் பண்ணலாம்
விடுவிக்கப்பட்ட வீரரை மீண்டும் ஏன் வாங்கியது ராஜஸ்தான்? இதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். 11.50 கோடிக்கு சென்ற ஆண்டு வாங்கப்பட்ட ஜெயதேவை 8.40 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான். இதன் மூலம் கிட்டதட்ட 3 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளது ராஜஸ்தான். இதன் மூலம், ஜெயதேவை வாங்கலாம் என நினைத்திருந்த சென்னை அணி ஏமாற்றம் அடைந்தது.