
உலககோப்பை கணிப்பு
கிரிக்கெட் உலகின் தீர்க்கதரிசியாக விளங்க கூடியவர் இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆம், இன்று நடக்கப்போவதை தனது ட்வீ ட் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிடுவார். 2019ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரும் என்று யார் கணித்து இருப்பார்.

ரெய்னா ஓடாதீர்
ஆனால் ஆர்ச்சர், 2015ஆம் ஆண்டே இது தொடர்பாக ட்வீ ட் போட்டுள்ளார். மேலும் சூப்பர் ஓவரில் எவ்வளவு ரன் தேவைப்படும்என்பதை 16 From 6 என்று பல ஆண்டுகளுக்கு முன் போட்டு இருந்தார். இதே போல் ரெய்னா 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய போது, அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ரெய்னா ஓடாதீர்கள் என்று ட்வீ ட் போட்டார்.

பூரான், கொரோனா எச்சரிக்கை
இதே போன்று 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எல்லைக் கோட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் பறந்து போய் கேட்ச் பிடித்தார். அதனை குறிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன் ட்வீ ட் போட்டு இருந்தார். Safe flight பூரான் என்று ட்வீ ட் போட்டு இருந்தார். இதே போன்று கொரோனா ஊரடங்கை குறிக்கும் விதமாக ஒரு நாள் ஒளித்து கொள்ள இடம் இருக்காது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மும்பை அணி கணிப்பு
இந்த நிலையில் ஆர்ச்சர் மும்பை அணிக்கு விளையாடுவதை 8 ஆண்டுக்கு முன்பு, மும்பை U deserved it என்றும், மும்பையா அல்லது ராஜஸ்தானா என்றும் ட்வீ ட் போட்டு இருந்தார். அதே போல், இவரை ஏலத்தில் எடுக்க மும்பையும், ராஜஸ்தான் அணியும் கடும் போட்டி போட்டது. இவர் உண்மையிலேயே நடப்பதை முன் கூட்டியே போடுகிறாரா இல்லை, இவர் போடும் ட்வீ ட் பின்னர் நடைபெறும் சம்பவங்களுக்கு ஏதேச்சையாக ஒத்து போகிறதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications