
ஐபிஎல்
ராஞ்சி போட்டி மற்றும் இந்திய A அணி போட்டிகளால் மட்டுமே இந்திய அணிக்குள் வீரர்கள் நுழைய முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், இளம் திறமைசாளிகளை கண்டறிய ஐ.பி.எல் உள்நாட்டு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விளையாடிய பல வீரர்கள் இன்று சர்வதேச போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர்.

நன்றி மறக்காத பாண்டியா
ஐபிஎல் தொடரின் ஏலம் இன்று நடைபெறுகிறது. இதனிடையே முன்னணி வீரர் ஹர்த்திக் பாண்டியா ஏலம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், உங்கள் லட்சியங்களை என்றும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஐபிஎல் ஏலம் எனக்கும் என் சகோதரனுக்கும் நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை நினைவுக்கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

பாண்டியா பிரதர்ஸ்
ஐபிஎல் போட்டி மூலம் உலக அரங்கில் பிரபலமடைந்தவர்களில் ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா முக்கியமானவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த 2015ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி ஆரம்ப விலையான ரூ.10 லட்சத்திற்கு வாங்கியது. இன்று வரை இவர்கள் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
பிரபலம்
ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டும் ஹர்த்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 57 ஒரு நாள் போட்டி, 43 டி20 மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே போல க்ருணால் பாண்டியா 18 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications