For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வீரர்களின் சம்பளத்தில் கைவைத்த பிசிசிஐ... மீடியா உரிமை ஏலத்தின் எதிரொலி.. அணிகள் அதிர்ச்சி!

மும்பை: ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் 12ம் தேதி தொடங்கிய இந்த ஏலத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளுக்கான உரிமைகள் விற்கப்பட்டுவிட்டன.

 ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம்

ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான உரிமை ரூ.44,075 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் வியாகாம் 18 நிறுவனம் ரூ.20,500 கோடிக்கும் வாங்கியது. இது கடந்த 5 ஆண்டுகளை விடவும் 2 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

பிசிசிஐ புதிய திட்டம்

பிசிசிஐ புதிய திட்டம்

இந்நிலையில் அடுத்ததாக வீரர்களின் சம்பளத்திலும் கைவைத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் தொடரின் பண மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுவிட்டதால், ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.90 கோடி என உள்ள உச்சபட்ச வரம்பை ரூ.120 - 130 கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

அணி நிர்வாகங்கள் அதிருப்தி

அணி நிர்வாகங்கள் அதிருப்தி

இதற்காக பிசிசிஐ சார்பில் அணி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அணிகள் ஒப்புதல் வழங்கிவிட்டால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். இதன் மூலம், ஒரு வீரரின் அதிகபட்ச சம்பளத் தொகை ரூ.20 முதல் ரூ.22 கோடி வரை கூட செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகங்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்திருப்பதாகவும், கூடுதல் பணம் செலவழிக்க தயாராக இல்லை எனவும் தெரிகிறது.

Recommended Video

IND vs SA Rahul Dravid Planனை உடைத்த Shreyas Iyer | *Cricket
பரிசுத்தொகை அதிகரிப்பு

பரிசுத்தொகை அதிகரிப்பு

இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வெற்றியாளரின் பரிசுத்தொகையும் அதிகரிக்கப்படவுள்ளது. நடப்பாண்டு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 20 கோடி பரிசாக பெற்றது. இந்த தொகையானது 25% வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Tuesday, June 14, 2022, 21:00 [IST]
Other articles published on Jun 14, 2022
English summary
IPL Players Salary increases ( ஐபிஎல் வீரர்களின் சம்பளம் உயர்வு ) அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் வீரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+