ஹைதராபாத்: 1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிகரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டது.

10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடக்க விழாவின்போது சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், லட்சுமணன் ஆகியோர் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குட்டி வாகனத்தில் அவர்கள் அமர வைக்கப்பட்டு மைதானத்தை சுற்றி வரச் செய்யப்பட்டனர். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மைதானத்தின் பின்னணியில் ஜெய்கோ.. பாடல் ஒலிக்க ஆரம்பமே அசத்தலாக இருந்தது.
இதன்பிறகு, சீனியர்களுக்கு விழா மேடையில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தங்கத்திலான குட்டி பேட் அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது. ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.