
ராஜஸ்தான் அணி பேட்டிங்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

பாட் கமின்ஸ் நன்கொடை
கொரோனாவால் இந்தியாவில் பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து காணப்படும் நிலையில், மிகுந்த சிரமத்திற்கிடையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்லின் கேகேஆர் பௌலர் பாட் கமின்ஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவிகளை செய்து வருகின்றனர். அவர் 50,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரூ.7.5 கோடி நிதியுதவி
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் அணியாக கொரோனா பாதிப்புகளுக்கு ஆக்ஸிஜன் வாங்குவதற்காக இன்றைய தினம் ரூ.7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவும்வகையில் இந்த நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் தெவித்துள்ளது.

ஆர்ஆர் நிதியுதவி
ராயல் ராஜஸ்தான் பவுண்டேஷன் மற்றும் பிரிட்டீஸ் ஏசியன் ட்ரஸ்ட் (பேட்) இணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளது. இந்த பேட் டிரஸ்டின் நிறுவனர் பிரின்ஸ் சார்லஸ் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கும் வகையில் இந்த நிதியை திரட்டியுள்ளதாக ஆர்ஆர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கவனம் கொள்ள திட்டம்
இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தை கருத்தில் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ராயல் ராஜஸ்தான் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு விஷயங்களில் கவனம் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அந்த பவுண்டேஷனின் தலைவர் ரஞ்சித் பார்த்குர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











