பெப்சி விலகல்.. ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சரானது விவோ மொபைல் நிறுவனம்
மும்பை: ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து பெப்சி குளிர்பான நிறுவனம் விலகிக்கொண்ட நிலையில், அதற்கு பதிலாக விவோ என்ற மொபைல் போன் நிறுவனம் அந்த ஸ்பான்சர்ஷிப்பை கையில் எடுத்துள்ளது.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஸ்பான்சராக ரூ.396.8 கோடிக்கு பிசிசிஐயுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் 2017வரை ஒப்பந்தம் நிலுவையில் இருந்த நிலையில், திடீரென தற்போது பெப்சி தனது ஸ்பான்சர்ஷிப்பை வாபஸ் பெற்றது.

இதையடுத்து, புதிய ஸ்பான்ஷரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டிருந்தது. தற்போது விவோ நிறுவனம், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Story first published: Monday, October 19, 2015, 17:22 [IST]
Other articles published on Oct 19, 2015


Click it and Unblock the Notifications