
டி20 தொடர் துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் இன்று முதல் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கவுள்ளது. இன்றிரவு 7 மணியளிவில் போட்டி துவங்கவுள்ளது.

அதிகரித்த தன்னம்பிக்கை
இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர்களின் கேப்டன் இயான் மார்கன், ஐபிஎல் போட்டிகளின் மூலம் இங்கிலாந்து வீரர்கள் அதிகளவில் பலனடைந்துள்ளதாகவும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து
ஐபிஎல் போட்டிகளின்மூலம் கடந்த 2019 உலக கோப்பை மற்றும் 2 டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக இங்கிலாந்து அணி செயலாற்ற ஐபிஎல் போட்டிகள் மிக சிறந்த காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகளவிலான அனுபவமும் தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இயான் மார்கன் நன்றி
ஐபிஎல் தங்களது வளர்ச்சியில் மிகச்சிறந்த பங்கு வகித்து வருவதற்கு நன்றி கூறுவதாகவும் இயான் மார்கன் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி சூழல்களில் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்த தெளிவையும் ஐபிஎல் போட்டிகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











