
வாசிம் ஜாபர் விலகல்
இந்த நிலையில், ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் பஞ்சாப் அணி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கருத்து வேறு பாடு காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்தார்.

ப்ரீத்தி ஜிந்தா
இதே போன்று பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக ஏலத்திற்காக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் தற்போது தனிப்பட்ட காரணங்களால் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அனில் கும்ப்ளே
ஒரே நாளில் 2 பேர் விலகியுள்ளது, பஞ்சாப் அணி ரசிகர்களிடையே அதிருப்தி அடைய செய்துள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில், அணில் கும்ப்ளே ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ப்ரீத்தி ஜிந்தா, வாசிம் ஜாபரின் ஆலோசனைகளை அனில் கும்ப்ளே புறம் தள்ளுவதாக கூறுப்படுகிறது.

அதிருப்தி
இந்த நிலையில், ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்து ஏலத்தில் மோசமாக செயல்படுவதாகவும், அவரை ஏலத்தில் தலையிட வேண்டாம் என்றும் மற்ற உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிருப்தியில் உள்ள பிரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். பஞ்சாப் அணியின் தொடக்கமே இப்படி இருக்கிறதே என்று ரசிகர்களும் வேதனையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications