
அஸ்வினின் செயல்பாடு
தமிழக வீரர் அஸ்வினை ஐபிஎல் மெகா ஏலத்தில் 5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி தக்க வைத்து கொண்டது. அஸ்வின் தனது பேட்டிங் திறமையை வளர்த்து கொண்டு முன்வரிசையில் களமிறங்கி அரைசதம் மற்றும் சாஹலுடன் கூட்டணி அமைத்து பந்துவீச்சிலும் கலக்கினார். பேட்டிங்கில் 191 ரன்களை குவித்த அஸ்வின், பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னையில் ஐபிஎல்
எனினும் அஸ்வினுக்கு 36 வயதாகி விட்டது. டி20 உலககோப்பையிலும் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாகவே 6 விக்கெட்டுகளை மட்டுமே அஸ்வின் கைப்பற்றினார். இதனால் அஸ்வினை விடுவிக்க, ராஜஸ்தான் அணி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது.

அஸ்வின் அனுபவம்
இதனால் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பினால், அவருடைய அனுபவம் நிச்சயம் கைக் கொடுக்கும். மேலும் பேட்டிங்கிலும் அஸ்வின் கலக்குவதால், சென்னை அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க முடிவு எடுக்கும். கடைசியாக அஸ்வின் சென்னை அணிக்காக 2015 ஆம் ஆண்டு விளையாடினார். இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் சென்னைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலமான சுழற்பந்துவீச்சு
சென்னை ஆடுகளம், தோய்வாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் செயல்படும். இதனால், சென்னை அணி தனது சுழற்பந்துவீச்சை பலப்படுத்த உள்ளது. ஏற்கனவே அணியில் மொயின் அலி, ஜடேஜா, மகீஷ் தீக்சணா இருப்பதால், அஸ்வினின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்கும். ஆனால், தோனிக்கும், அஸ்வினுக்கும் நல்ல உறவு சமீப காலமாக இல்லை. இதனால் கடந்த முறையே அஸ்வினை சென்னை அணி நிர்வாகம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











