For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பிளே ஆப் சுற்று போட்டிகளின் நேரம் மாற்றம்... முன்னதாகவே துவங்குகிறது!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்று ஆட்டங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

ஐபிஎல் போட்டிகளின் பிளே ஆப் சுற்று போட்டிகளின்

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் பைனல்ஸ் நடைபெறும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 40 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

IPL play off matches to start early

தற்போதைய நிலையில் ஹைதராபாத் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் மற்றும் கொல்கத்தா 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன.

இந்த சீசனின் 57வது ஆட்டமான தகுதிச் சுற்று 1 ஆட்டம் மும்பையில் மே 22ல் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் மே 23ல் புனேயிலும், தகுதிச் சுற்று 2 ஆட்டம் புனேயில் மே 25லும், பைனல்ஸ் மே 27ல் மும்பையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மைதானத்தை தயார் செய்ய போதிய அவகாசம் இல்லாததால், புனேயில் நடைபெறுவதாக இருந்த எலிமினேட்டர் மற்றும் தகுதி சுற்று 2வது ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் மற்றும் டிவியில் பார்க்கும் ரசிகர்கள் நடு இரவு வரை முழித்திருக்க வேண்டியிருப்பதால், பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றுமை பைனல்ஸ் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, May 9, 2018, 18:24 [IST]
Other articles published on May 9, 2018
English summary
Play off matches scheduled to play at 8 pm are advanced to 7 pm.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X