கொல்கத்தா : ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே, குஜராத் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், எஞ்சிய இடத்திற்கு முன்னேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கேகேஆரை வீழ்த்தினால் லக்னோ அணியும், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில், டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கரண் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழக்க குயின்டன் டி காக் 28 ரன்களிலும், பிரேராக் மான்கட் 26 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோனிஸ், இன்றைய ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். கேப்டன் குர்னல் பாண்டியா 9 ரன்களில் வெளியேற,அயூஷ் பதோனி 25 ரன்கள் சேர்த்தார். எனினும் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான், தனி ஆளாக நின்று அணியை கவுரவமான இலக்கிற்கு கொண்டு சென்றார்.
இதில் 30 பந்துகளில் 58 ரன்கள் குவிக்க, இதில் 5 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்க்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் லக்னோ அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே வை முந்தி 2வது இடத்திற்கு செல்ல முடியும்.