டெல்லி: இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல டோணி தலைமையில் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. டோணியோடு வேறு யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்.
சூதாட்டப் புகார்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு சீசனில் விளையாடவில்லை. அதனால், அந்த அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடினர்.
