
பஞ்சாப் அபாரம்
நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொகாலியில் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 167 ரன்களை எடுத்தது. இரண்டாவது பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. காரணம், பஞ்சாப் அணியின் தூள் பந்து வீச்சு.

ஸ்பின்னர்
குறிப்பாக இளம் ஸ்பின்னர் ராகுல் தெவாதியா 4 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் எதிரணி கேப்டனான கம்பீரையும், அதிரடி வீரர் ராபின் உத்தப்பாவையும் அவர் வீழ்த்தி ஆட்டத்தை தன் அணி பக்கம் திருப்பினார்.

சேவாக் குஷி
வென்றேயாக வேண்டிய அப்போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா போலவே வீரேந்திரசேவாக்கும் குஷியடைந்தார். தனது டிவிட்டில் அதை வெளிப்படுத்தினார்.
மீடியாக்கள் மீது சீண்டல்
டிவிட்டரில் சேவாக் கூறுகையில், "அணி வீரர்களை நினைத்து நிஜமாக பெருமையடைகிறேன். சில மீடியாக்காரர்கள் வளைப்பதை (திரிப்பதை) விட எங்கள் சுழற்பந்து வீச்சாளர் பந்தை நன்கு வளைத்தனர் (சுழற்றினர்)" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











