
ஐபில் தொடர்
இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்கவேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்தவும் இந்தியன் ப்ரீமியர் லீக் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகவும் பிரபலமான உள்நாட்டு தொடர்களில் ஐபிஎல்-ம் ஒன்று.

மைல்கல்
ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை கோடிக்கணக்கில் செலவளித்து அணிகள் ஏலம் எடுக்கின்றன. அந்த வகையில் 2008ம் ஆண்டும் முதல் கடந்த ஆண்டு வரை ரூ. 5,999 கோடி வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய ஏலத்தில் அது ரூ.6000 கோடியை கடக்கவுள்ளது.

இந்திய வீரர்கள்
இதுவரை வழங்கப்பட்டுள்ள சம்பளம் தொகை ரூ.5,999 கோடியில் 56.7% தொகையை ( ரூ.3,999 கோடி) இந்திய வீரர்கள் 467 பேர் பெற்றுள்ளனர். மேலும் மீத தொகையான ( ரூ. 2,599 கோடி) அயல் நாட்டு வீரர்கள் 297 பேர் பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் தோனி
இதுவரை ஐபிஎல்-ல் அதிக வருமானம் ஈட்டியுள்ள வீரர்களின் பட்டியலில் சி.எஸ்.கே கேப்டன் தோனி முதலிடத்தில் ( சுமார் ரூ.150) உள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சுமார் 125 கோடியுடன் உள்ளனர். ஆர்.சி.பி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ரூ.100 கோடிக்கு மேல் பெற்றுள்ள ஒரே அயல்நாட்டு வீரர் ஆவார்.


Click it and Unblock the Notifications