ஐபிஎல்லை விட்டுட்டு வாங்க, பயிற்சி மேற்கொள்ள வேண்டும்: இலங்கை வீரர்களுக்கு உத்தரவு

இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எனவே அணி வீரர்கள் அதற்காக பயிற்சி எடுக்கத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது குறித்து விளையாட்டுத்துறை வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இனி வரும் காலத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பும் இலங்கை வீரர்கள் அணியின் பயிற்சி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டியிருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெறும் 3 டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன், தில்ஷன், சங்ககாரா, ஜயவர்த்தனே உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதில் 5 பேர் இங்கிலாந்து செல்லும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
பயிற்சியில் கல்ந்துகொள்ளாதவர்கள் அணியில் இருந்தே நீக்கப்படலாம் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications