
விலகிய ஜடேஜா
ஓமிக்ரான் என்ற புதியவகை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய் கொண்டே இருந்த வீரர்கள் தேர்வு சமீபத்தில் முடிந்தது. ஆனால் அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, தற்போது ஓய்வு அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஓய்வா?
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக ஜடேஜா அணியில் இடம்பெறாமல் போனார். சிறிய காயம் தான் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தன்மை மிகப்பெரிதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்டிருக்கும் காயத்தினால் ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளவுள்ளார். அதனை செய்த பிறகு சுமார் 7 மாதங்கள் வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது எனக்கூறப்படுகிறது.

என்ன காரணம்
தற்போது 33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா 7 மாதத்திற்கு பின் உடற்தகுதியை நிரூபித்த பிறகு தான் அணிக்கு திரும்ப முடியும். அப்போதும் கூட டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விளையாட அவரது கால்கள் ஒத்துழைக்காது. இதன் காரணமாக தற்போதே ஜடேஜா ஓய்வை அறிவிக்கும் திட்டத்திற்கு வந்துவிட்டார். எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார் எனத்தெரிகிறது.
Recommended Video

அடுத்தடுத்த திட்டம்
இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 17 அரைச் சதங்களுடன் 2,195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சிலும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளவுள்ளதால் இந்திய அணி அடுத்தடுத்து மோதவிருக்கும் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் இருந்து ஜடேஜா ஏற்கனவே விலக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications