கடும் விமர்சனம்
பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களும், இந்திய அணியின் தோல்வியை விமர்சித்து வருகின்றனர். இந்திய அணி நிர்வாகமும் இது குறித்து கடும் அதிருப்தியில் இருக்கிறது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
வாசிம் ஜாபர் டுவீட்
இந் நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித்தை நியமனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக டெஸ்ட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கோரி இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
|
நேரம் வந்தாச்சு
அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023ம் ஆண்டு உலக கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
2 அணிகளாக மோதல்
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, அணியில் உள்ள வீரர்கள் கோலிக்கும், ரோகித்துக்கும் ஆதரவாக 2 அணிகளாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாசிம் ஜாபரின் ட்வீட் வைரலாகி வருகிறது.