
பவுலிங் சர்ச்சை
இந்த தொடரில் மதுரை அணிக்கு எதிராக அவரின் திண்டுக்கல் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு எதிராக கேப்டன் அஸ்வின் வித்தியாசமாக பவுலிங் செய்தார். அந்த பவுலிங் முறை சர்ச்சைக்கு உள்ளானது.

கோமாளி பவுலிங்
இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போதும் இந்த கோமாளித்தனமான முறையில் பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினார் அஸ்வின். அவரின் இந்த பந்தை ஒளித்து வைத்துக் கொண்டு வீசும் முறை ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

முதல் தடவை அல்ல
அஸ்வின் இது போன்று வினோதமாக பந்துவீசுவது இது முதல் முறை அல்ல. ஐபிஎல் போட்டிகளிலும் அவ்வப்போது வழக்கத்திற்கு மாறாக பந்து வீசியுள்ளார். ஆனால் அவை வீதிகளுக்கு உட்பட்டே வரும்.

விதிமுறை மீறல்
ஆனால் இதுபோன்ற பந்துவீச்சு கிரிக்கெட்டின் விதிகளை மீறுகிறது என்று சிலர் விமர்சிக்கின்றனர். கேரம் பாலுக்கு பேர்போன அஸ்வினின் இந்த பந்தை போங்கு பால் என்றும் சென்னை 28 மிர்ச்சி சிவா பவுலிங் என்றும் கிண்டல் செய்கின்றனர்.

தடைக்கு வாய்ப்பு?
அவரது இந்த வித்தியாசமான பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இதுபோன்று ஸ்டைலில் செய்தால் அவருக்கு பந்துவீச தடை செய்யும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற விசித்திரமான பந்துவீச்சை சர்வதேசப் போட்டிகளில் வீசினால் ஐசிசி ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications