For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

17 பந்துகளில் அரைசதம்... கொல்கத்தாவில் தெறிக்க விட்ட இஷான்!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தோப் பட்டியலில் சேர்ந்தார் மும்பையின் இஷான் கிஷண்

Recommended Video

கொல்கத்தாவை வீழ்த்தி நான்காம் இடம் பிடித்தது மும்பை

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்ததில், மும்பையின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் புது சாதனை படைத்தார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Ishan kishan scored fastest fifty

கொல்கத்தாவின் சுனில் நரேன், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

கொல்கத்தாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங் செய்தது. அணியின் ரன் குவிப்பு மெதுவாக இருந்த நிலையில் களமிறங்கினார் இஷான் கிஷண்.

அவர் அதிரடியாக ரன் குவிப்பில் இறங்கினார். 17 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்து தூள் கிளப்பினார்.

21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து நரேன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் அதிகவேக அரை சதம் அடித்தோரில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, May 9, 2018, 21:39 [IST]
Other articles published on May 9, 2018
English summary
Mumbai player ishan kishan scored 17 ball fifty in kolkatta.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X