
அசத்தல் ஆட்டம்
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ஜடேஜா ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. தாம் யார் என்றும், ஆல் ரவுண்டர் எப்படி இருக்க வேண்டும் என்றும் நிரூபித்தவர். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 வகை இந்திய அணியிலும் இடம் பெற்றார்.

திடீர் சிக்கல்
இந்நிலையில் டி20 போட்டிகளில் ஜடேஜா இறங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதன் காரணம் அவர் சீனியர் வீரர் என்பது தான். 2020ம் ஆண்டு டி 20 உலக கோப்பை போட்டிகளை கணக்கில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

அணி நிர்வாகம் முடிவு
அதன்படி, கருணால் பாண்டியா, ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு சுழற்சி அடிப்படையில், டி 20 தொடரில் வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ஜடேஜா உத்தேச அணியில் இடம்பெற்றாலும், ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடினமான ஒன்று
இளம்வீரர்கள் வரவால் அவர் விளையாடும் வாய்ப்புகள் குறைவே. ஆக மொத்தத்தில் ஆடும் லெவனில் ஜடேஜா இறங்குவது சற்று கடினமே. ஆனால் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தவிர வேறொரு காரணமும் அதிகளவு சுட்டிக் காட்டப் படுகிறது. ஜடேஜா, தல தோனியிடம் நெருக்கமாக இருப்பவர். அவரால் அணிக்குள் வளர்த்துவிடப்பட்டவர் என்பதால் 20 ஓவர் போட்டிகளில் ஒதுக்கி வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications