
ஆல்-ரவுண்டர் ஜடேஜா
ஐபிஎல் 2021 தொடருக்கான சிஎஸ்கேவில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. கடந்த ஜனவரியில் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரின்போது காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பிட்னசை என்சிஏவில் நிரூபித்த அவர் சிஎஸ்கே அணியில் இணைந்ததுடன் தனது 7 நாட்கள் குவாரன்டைனையும் முடித்துள்ளார்.

புகைப்படம் வெளியிட்ட சிஎஸ்கே
மேலும் நேற்றைய தினம் சிஎஸ்கே பயிற்சி முகாம்களில் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டார். முன்னதாக அவர் குவாரன்டைனை முடித்ததை பாராட்டும்வகையில் சுரேஷ் ரெய்னாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சிஎஸ்கே அணி.
ஒவ்வொரு முறையும் உற்சாகம்
இந்நிலையில் தான் கடந்த 2009ல் எம்எஸ் தோனியை சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட உற்சாகம் தற்போதுவரை நீடித்து வருவதாகவும் ஒவ்வொரு முறையும் இதை தான் உணர்வதாகவும் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் முதல் முறை பார்க்கும் சந்தோஷம் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

3 மாதங்கள் 'நோ' போட்டி
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது இடது கட்டைவிரலில் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 மாதங்கள் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் அவர் மிஸ் செய்தார்.


Click it and Unblock the Notifications