
முதல் ஒருநாள் போட்டி
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் சிக்கி திணறியது. அவர் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் என 3 வீரர்கள் டக் அவுட்டாகினர். இதுமட்டுமின்றி பேர்ஸ்டோ (7), டேவிட் வில்லி (21), ப்ரைடன் கார்ஸ் (15) ரன்களுக்கும் நடையை கட்டினர். மொத்தமாக 7.2 ஓவர்களை வீசிய பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பும்ராவின் சாதனை
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம், ஜஸ்பிரித் பும்ரா பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் இந்தியர் என்ற பெருமையை பும்ரா படைத்தார்.

சர்வதேச அளவு
சர்வதேச அளவில் பார்த்தால் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய 4வது வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்தார். 2021ம் ஆண்டு வக்கர் யோனிஸ் 7/36 எடுத்திருந்தார். அதன் பின் வின்ஸ்டன் டேவிஸ் 7/51 மற்றும் கேரி கில்மர் 6/14 விக்கெட்களை எடுத்தனர். தற்போது 4வது வீரராக பும்ரா உருவெடுத்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வருகிறார். 5வது டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசியிருந்தார். தற்போது டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தை திணறடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











