
பும்ராவின் காயம்
இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் ரசிகர்களுக்கு இருந்த பெரும் குறை ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது தான். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த பும்ரா, மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் தான் கம்பேக் கொடுத்தார். ஆனால் மீண்டும் ஏற்பட்ட முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் இருந்து விலகினார்.

அவசரப்படுத்தும் பிசிசிஐ
இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான கடைசி போட்டியில் களமிறங்கிய பும்ரா 50 ரன்களை விட்டுக்கொடுத்தார். எந்தவொரு தாக்கமும் அவரிடம் இருந்து ஏற்படவில்லை. எனவே பிசிசிஐ தான் பும்ரா விரைந்து வரவேண்டும் என அவசரப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இது நல்லதல்ல.

ஹர்திக்கிற்கு வந்த நிலை
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இதே நிலைமை தான் இருந்தது. பூரண குணமடையாத அவரை, கட்டாயத்திற்காக டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்தனர். ஆனால் அவர் சொதப்பினார். நீண்ட ஓய்வுக்கு பின் தான் நல்ல கம்பேக் தந்தார். தற்போது பும்ராவும் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையாமல் இருக்கும் சூழலில் அவரை டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச்செல்வது நல்லதல்ல.

குறுகிய அவகாசம்
இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா புறப்படுகிறது. அணியில் எதாவது மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டும் என்றால் அக்டோபர் 9ம் தேதிக்குள் செய்துவிட வேண்டும். எனவே அடுத்த 9 நாட்களில் பிசிசிஐ என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications