
சிட்னியில் 3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது சிட்னியில் 3வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.

சிறப்பான துவக்கம்
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 407 ரன்களை இலக்காக அளித்துள்ளது ஆஸ்திரேலியா. இந்நிலையில் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். ஆயினும் சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

10 விக்கெட்டுகள்
இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் அவரது பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

சிறப்பான அணுகுமுறை
விஹாரி போன்றவர்கள் பும்ராவின் பௌலிங்கில் கேட்ச்களை மிஸ் செய்தனர். ஆயினும் அவர் தனது பொறுமையை கைவிடாமல் சிறப்பாக தொடர்ந்து பௌலிங் செய்தார். அவருடைய பௌலிங்கில் இதுவரை 6 முக்கிய கேட்ச்கள் மிஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தன்னுடைய பொறுமையை மட்டுமின்றி சிரிப்பையும் அவர் பரிசாக அளித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











