எவ்வளவு பிரச்சனை.. ஜெயதேவ் உனட்கட்டால் ஏலத்தில் நடந்த களேபரம்!
பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இன்றைய ஏலத்தில் மிகவும் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.
ஜெயதேவ் உனட்கட் என்ற வீரரை எடுக்க அணிகளுக்குள் சண்டையே ஏற்பட்டு இருக்கிறது. முக்கிய கடைசி நேரத்தில் இதில் பெரிய டிவிட்ஸ் நடந்து இருக்கிறது.
இவர் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். மிகவும் அதிக விலைக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

யார்
குஜராத்தை சேர்ந்தவர் ஜெயதேவ் உனட்கட். இவர் மிகவும் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர். சமயங்களில் மிகவும் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். இவருக்கு 26 வயது நிரம்பி இருக்கிறது.

சென்னை அணி
இவருக்கு சென்னை அணியும், பஞ்சாப் அணியும் ஆர்வம் காட்டியது. 10.50 கோடி வரை சென்னை அணி இவரை எடுக்க தயாராக இருந்தது. பஞ்சாப் அணியும் 11 கோடி வரை சென்றது. கடைசியில் சென்னை அணி விலகியது.

டிவிஸ்ட்
கடைசியில் ராஜஸ்தான் அணி வேறு களத்தில் இறங்கியது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அங்கு எல்லோரும் சிரிக்க ஆர்மபித்துவிட்டார்கள்.

கடைசி
கடைசியில் ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.11.50 கோடி கொடுத்து ஜெயதேவ் உனட்கட் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் ஏலம் முடிந்ததும் அவர்கள் அணி கைதட்டி கொண்டாடியது.


Click it and Unblock the Notifications