மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரொட்ரிகஸ், அணி உலகக் கோப்பையை வென்ற கொண்டாட்டத்திற்குப் பிறகு, தனது குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வையும், தந்தையின் பேட்டிங் ஆலோசனை பற்றியும் பகிர்ந்திருக்கிறார். வெற்றியடைந்த அணியுடன் அவர் எடுத்த செல்ஃபி ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
"பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் ஜெமிமா, தான் எட்டு வயதில் தேவாலய அரங்கில் சந்தித்த விபத்தை நினைவு கூர்ந்தார். உறவினர்களுடன் 'செருப்பு சண்டை' விளையாடியபோது, சகோதரியின் க்ரோக்ஸ் விழுந்தவுடன், அதை எடுக்க முதல் மாடியில் இருந்து அவர் கீழே குதித்துள்ளார்.

அவர் கூறியதாவது: "நான் ஒரு முழு ஹீரோவைப் போல, 'நான் அதை எடுப்பேன்' என்று சொன்னேன். முதல் மாடியில் இருந்து நான் விழுந்தேன். அதிர்ஷ்டவசமாக, ஒருவர் கீழே அமர்ந்திருந்தார், நான் அவர் தலையில் விழுந்தேன். நான் இறந்துவிட்டதாக என் உறவினர்கள் நினைத்தார்கள்." ஆனால் நான் காயமின்றி தப்பினேன்.
சமீபத்திய உலகக் கோப்பை வெற்றியில் ஜெமிமா ரொட்ரிகஸ் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டத்தில் அபார சதத்தை விளாசி, சாதனை சேஸிங்கிற்கு உறுதுணை புரிந்தார். அவரது ஆட்டம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
தனது தந்தையின் பேட்டிங் ஆலோசனையையும் ஜெமிமா பகிர்ந்துள்ளார். இளமைக் காலத்தில் டி20 போட்டிகளில் அதிரடி பேட்டர்களைப் போல் ஆட முயன்றபோது, ஃபில்டிங்கில் உள்ள இடைவெளியை பார்த்து புத்திசாலித்தனமாக ரன் குவிக்க வேண்டும் என்று தனது தந்தைதான் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஜெமிமா கூறியது: "என் அப்பா, நான் புத்திசாலித்தனமாக ரன்களை எடுக்க முடியும் என்று எப்போதும் சொல்வார். என் வாழ்க்கையை நான் தொடங்கியபோது, நான் நிறைய டி20 போட்டிகளை விளையாடினேன். அனைத்து அதிரடி பேட்டர்களும் பந்துகளைச் சிதைப்பதைப் பார்த்தேன், டி20களில் வெற்றி பெற நான் அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்." என்று ஜெமிமா கூறியுள்ளார். இன்று தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி தேர்வு செய்துள்ளது.