
மேற்கு இந்தியத் தீவுகளில்
தற்போது கும்ப்ளே தலைமையிலான இந்திய அணிக் குழு மேற்கு இந்தியத் தீவுகளில் முகாமிட்டுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. கோஹ்லி தலைமையில் இந்தத் தொடரை சந்திக்கிறது இந்தியா.

வீரர்களுக்கு ரூல்ஸ்
இந்திய வீரர்களுக்கு கும்ப்ளே சில விதிகளை வகுத்துள்ளாராம். அதை அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாராம்.

லேட்டா வந்தால் அபராதம்
அதன்படி அணி பஸ்ஸில் ஏறுவதற்கோ அல்லது பயிற்சிக்கோ லேட்டாக வந்தால் 50 டாலர் அபராதம் செலுத்த வேண்டுமாம். அதேபோல ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் டீம் மீட்டிங் நடக்குமாம். அதில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமாம்.

எப்போது வேண்டுமானாலும் பேசலாம்
இதுதவிர எப்போது வேண்டுமானாலும் தன்னை வீரர்கள் அணுகி ஆலோசனை பெறலாம் என்றும் கும்ப்ளே வீரர்களுக்குத் தெரிவித்துள்ளாராம்.
நல்ல விஷயம்தானே!


Click it and Unblock the Notifications











