
குவிந்த விமர்சனங்கள்
இஷான் கிஷான் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டாலும், ஐபிஎல் தொடரின் போதும் பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதற்கு காரணம் மும்பை அணி அவரை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதற்கு இஷான் கிஷான் நியாயமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தான். எனினும் இஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்தார். இது கடந்த 2 சீசன்களை விட அதிகம்தான் ஆகும்.

வாட்சன் வெளிப்படை பேச்சு
இப்படி இருக்கையில் பலரும், அவர் சரியாக ஆடவில்லை என நினைத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் ஒருபடி மேல் சென்று " இஷான் கிஷான் ரூ.15 கோடிக்கு வாங்குவதற்கெல்லாம் ஒன்றும் வொர்த் ( தகுதி ) இல்லை என பகிரங்கமாக கூறினார்.

கபில் தேவ் பதில்
இந்நிலையில் அதற்கு கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். அதிக தொகை தான் இஷான் கிஷானுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டது. எந்தவொரு அணி நிர்வாகமும் அவ்வளவு பணத்தை செலவு செய்ய முட்டாள்கள் கிடையாது. அந்த வீரரின் தரம் என்னவென்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் வீரர்கள் தான் அவ்வளவு பணத்தை கண்டு அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

சீனியர்களின் அனுபவம்
மிகப்பெரும் வீரர் யுவ்ராஜ் சிங்கிற்கே இதுபோன்று நடந்துள்ளது. 2014ம் ஆண்டு டெல்லி அணி அவரை ரூ.14 கோடிக்கு வாங்கியது. அவர் 14 போட்டிகளில் 376 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக், பதான் சகோதரர்கள் ஆகியோர் பெரும் பணத்திற்கு சென்று அழுத்தத்தால் சொதப்பியுள்ளனர். அதில் இருந்து இளம் வீரர்கள் மீண்டு வந்து சுதந்திரமாக ஆட வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











