
5வது டி20 போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் டி20 போட்டி இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ளதையடுத்து இந்த தொடரின் 5 போட்டிகளிலும் வித்தியாசமான துவக்க வீரர்களின் இணைகள் சோதித்து பார்க்கப்பட்டுள்ளன.

கோலி மற்றும் ரோகித்
இந்நிலையில் இன்றைய தினம் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களின் இந்த இணை சிறப்பான துவக்க பார்ட்னர்ஷிப்பை இன்றைய போட்டியில் அமைத்துள்ளது. கடந்த 2014ல் இந்த இணை ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கியது.

94 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இதனிடையே இன்றைய போட்டியில் விராட் கோலி -ரோகித் சர்மா இணை இணைந்து 8 ஓவர்களை விளையாடி 94 ரன்களை குவித்துள்ளது. ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை அடித்த நிலையில் விராட் கோலி அவுட்டாகாமல் 52 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இந்த தொடரில் விராட் கோலி தனது 3வது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

கலக்கல் ஆட்டம்
இந்த தொடரில் அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸ்கள், அதிக ரன்கள் மற்றும் அதிக அரைசதங்கள் என கலக்கலான ஆட்டத்தை அளித்துள்ளார் விராட் கோலி. அதிகமான சராசரியும் அவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் ரோகித்தும் கவனம் ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











