டெல்லி : ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக விளையாடி வருகிறார் அணி வீரர் சுனில் நரேன்.
இந்நிலையில் அந்த அணியில் இணைந்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியானது என்று அவர் கூறியுள்ளார்.

கேகேஆர் அணி தனக்கு ஒரு குடும்பம் போன்றது என்றும் அவர் மேலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணியின் வீரர் சுனில் நரைன் அந்த அணியின் வெற்றித் தருணங்களுக்கு கைக்கொடுத்தவர். கடந்த சீசனில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. ஒரு போட்டியின்போது அப்போது அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் சுனில் நரேன் சிறப்பான வீரர் என்றும் அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கேகேஆர் அணி தனக்கு ஒரு குடும்பம் போன்றது என்றும் அணியில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும் என்றும் சுனில் நரேன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போதெல்லாம் அணி தன்னை குடும்பத்தை போல உணர வைத்து பாதுகாப்பாக விளையாட வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.