கெயில் செய்த வால்த்தனம்
இந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்கள் என்ற அரிய சாதனையை செய்தார் கெயில். இந்த சாதனை செய்வதற்கு முன் இந்த போட்டிக்கான பயிற்சியின் போது கெயில் செய்த வால்த்தனம் ஒன்று வீடியோவில் வெளியாகி உள்ளது.
வீரர்கள் பயிற்சி
போட்டி துவங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் பஞ்சாப் வீரர்கள் சிலர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அனைவரும் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் பவுண்டரி கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
பாங்க்ரா நடனம்
இல்லை, இல்லை. ஆடிக் கொண்டு இருந்தார். பஞ்சாப்பின் பாங்க்ரா இசைக்கு ஏற்ப நடன அசைவுகளை கொடுத்துக் கொண்டு சிறப்பாக பயிற்சி செய்து கொண்டிருந்தார் கெயில். இந்த பயிற்சியை முடித்து விட்டு தான் நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.
சிக்ஸர் மன்னன்
கெயில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த நான்கு சிக்ஸர்களோடு சேர்த்து 302 ஐபிஎல் சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், 4133 ஐபிஎல் ரன்கள் அடித்துள்ளார் கெயில். மேலும், ஆறு ஐபிஎல் சதங்கள் அடித்துள்ளார் இந்த சிக்ஸர் மன்னன்.