
3வது டெஸ்ட் போட்டி
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் டேர்ன் ஆகும் வகையில் பிட்ச் இருந்ததால் இந்தியா சொதப்பியது எனக்கூறலாம். ஆனால் ரவீந்திர ஜடேஜா ஏன் சொதப்பினார் என்ற கேள்வி தான் சமூக வலைதளம் முழுக்க உள்ளது. 12 ரன்களுக்கெல்லாம் முதல் விக்கெட் சரிந்துவிட்ட சூழலில் 2வது விக்கெட்டாக லபுசாக்னேவையும் 4வது ஓவரிலேயே வீழ்த்தினார் ஜடேஜா. ஆனால் அது நோ பாலாக மாறியது.

மோசமான விளைவு
இதன் விளைவாக மார்னஸ் லபுசாக்னே - உஸ்மான் கவாஜா ஜோடி இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் தான் செய்த தவறை ஜடேஜாவே சரிசெய்தார். 91 பந்துகளில் 31 ரன்கள் அடித்து செட்டிலாகி இருந்த லபுசாக்னே மீண்டும் ஜட்டுவிடம் சிக்கினார். தொடர்ச்சியாக ஃபுல்லர் லெந்த் பந்துகளை வீசி வந்த ஜடேஜா திடீரென வேகத்தை மட்டும் சற்று அதிகரித்து வீசினார். இதனால் பந்து டேர்னாகி ஸ்டம்பில் மோதியது.

ஷாக்கான மார்னஸ்
அதே போன்ற பந்துகளை நன்கு ஆடி வந்த லபுசாக்னே, இந்த முறை எப்படி பந்து உள்ளே வந்தது என்றே புரியாமல் திகைத்து நின்றார். அதுவும் ஸ்டம்பை கவர் செய்து நின்ற போதும் கண் இமைப்பதற்குள் உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் அதிருப்தியுடன் வெளியான லபுசாக்னே டக் அவுட்டிற்கு சென்ற பிறகும் தனது விக்கெட்டை பார்த்துக்கொண்டே இருந்தார்.

4 முறை அவுட்
இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜாவிடம் 4வது முறையாக அவுட்டாகிறார் மார்னஸ் லபுசாக்னே. நாக்பூர் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும், டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலும் ஜடேஜாவிடம் சிக்கி தான் வெளியேறினார். இதனால் எப்படி தான் ஜடேஜாவை சமாளிப்பது என்று புரியாமல் லபுசாக்னே குழப்பத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











