கவர்ந்த விளம்பரம்
அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தான் அந்த விளம்பரமும் எடுக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தின் முடிவில் இரண்டு பெண்களுக்கும் சல்யூட் கூறி மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ நிகழ்ச்சியும் முற்று பெற்றிருக்கும். அந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேரடியாக அந்த கடைக்கு சென்றே ஷேவ் செய்திருக்கிறார்.
|
எனது முதல் அனுபவம்
அதில் என்ன பெரிய ஆச்சரியம் என்று நினைக்கலாம். அவர் ஷேவ் செய்தது சலூன் கடையில் இருந்த பெண்ணிடம்.... அதுமட்டுமல்ல தமது வாழ்நாளில் இது வரை மற்றவர்களிடம் ஷேவ் செய்ததே இல்லை... இது தான் முதல் அனுபவம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளார்.
மிக்க மகிழ்ச்சி
மேலும் சலூன் கடையில் பெண்களை பார்ப்பது மிகுந்த பெருமை அடைய செய்கிறது. அவர்களுக்கு எனது மரியாதையும், தனியார் நிறுவனம் அளித்த உதவித் தொகையும் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சச்சின் கூறியிருக்கிறார். சச்சினின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
குவியும் பாராட்டுகள்
ஜோதி மற்றும் நேஹாவின் தொழிலை அங்கிருக்கும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தால் முரண்பாடுகளுக்காக போராடியவர்கள் என்கிற விருதை இருவரும் பெற்றுள்ளனர். சமூகத்தில் ஆண், பெண் என்ற பேதம் எதுவும் இல்லை. அதை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஜோதி மற்றும் நேஹா சலூன் கடைக்கு நேரில் சென்றிருப்பதை பாராட்டுவதை விட வேறு என்ன சொல்ல முடியும். சபாஷ்..... சச்சின்.....!!