
முடியவில்லை
அவரை 'வச்சி செய்து' வருகிறார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெயந்த் யாதவை கூட சதம் அடிக்க விடாமல் தடுக்க முடியவில்லை ஆன்டர்சனால். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சில் அஸ்வினும், பேட்டிங்கில் விராட் கோஹ்லியும், இங்கிலாந்தால் ஜீரணித்து கொள்ள முடியாத திமிங்கிலங்களாக மாறிப்போயுள்ளனர்.

மைன்ட் கேம்
எனவே மைன்ட் கேம் ஆரம்பித்துள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். அதன் ஒரு பகுதியாகவே, நிருபர்களிடம் பேசிய ஆன்டர்சன், விராட் கோஹ்லி பேட்டிங் டெக்னிக்கை மேம்படுத்திக்கொள்ளவில்லை என கூறியிருந்தார். இங்கிலாந்து பிட்சுகளில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முன்பு கோஹ்லி திணறியதாகவும் இப்போதும் அதைப்போலவேதான் உள்ளதாகவும் ஆனால் இந்திய பிட்சுகளில் வேகப்பந்து வீச்சு எடுபடவில்லை என்பதால் விராட் கோஹ்லி சிறப்பாக பேட் செய்ய முடிவதாகவும் அவர் கூறினார்.

கோஹ்லி மீது குறை சொன்னார்
இங்கிலாந்து பிட்சில் வேகப்பந்து வீச்சு ஸ்விங் மற்றும் இன்னமும் அதிக பவுன்சாக இருக்கும் என்றும், இந்திய பிட்சில் பந்து வேகம் குறைந்து செல்வதால், பேட்ஸ்மேன் தவறிழைக்க வாய்ப்பு குறைவு எனவும், கோஹ்லி ஸ்பின் பந்துகளில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் இந்திய பிட்சில் நன்கு ஆட முடிகிறது என்றும் ஆன்டர்சன் கூறினார்.

கோஹ்லி பதிலடி
மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோஹ்லி பேசுகையில், இந்திய அணி எப்போதுமே தோற்றால் அதை லகுவாக எடுத்துக்கொண்டு, வெற்றி பெற முயற்சிக்கும் அணி என்றும், தோல்விக்காக பிறரை குறை கூற காரணம் தேடுவதில்லை எனவும் பளார் என தெரிவித்தார்.

முதிர்ச்சி
சும்மா உட்கார்ந்து கொண்டு எதிரணி வீரர்களின் டெக்னிக் குறித்து இந்திய வீரர்கள் கவலைப்படுவதில்லை எனவும், எங்களது பலம், பலவீனம் பற்றி மட்டுமே யோசித்து வருகிறோம் என்றும் கோஹ்லி முகத்தில் அறைந்தாற்போல தெரிவித்தார். நாங்கள் பலவீனமேயற்ற வீரர்கள் இல்லை என்றும், ஒவ்வொரு போட்டியிலும் திருத்தி நடந்து கொள்ளவே விரும்புவதாகவும் கோஹ்லி முதிர்ச்சியோடு கருத்தை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











