
கழற்றிவிடப்பட்ட மயங்க் அகர்வால்
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த மயங்க் அகர்வால், கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போதும் ரன்கள் சேர்க்க முடியாமலே இருந்தார். இதன் காரணமாக வழக்கம் போல் பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை கழற்றிவிட்டது. பின்னர் ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்டார்.

கேப்டன் மயங்க் அகர்வால்
இந்த நிலையில் ரஞ்சி டிராபி போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த மயங்க் அகர்வால், கர்நாடகா அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங் ஃபார்மையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மயங்க் அகர்வால், மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளார். அதேபோல் கர்நாடகா அணியை அரையிறுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

ரஞ்சி கோப்பை அரையிறுதி
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை எதிர்த்து செளராஷ்டிரா அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செளராஷ்டிரா அணி ஷெல்டன் ஜாக்சன் மற்றும் வசவடா ஆகியோரின் சதங்களால் 527 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய கர்நாடகா அணியில் மயங்க் அகர்வால் தனியாளாக போராடி இரட்டை சதம் விளாசினார்.

மயங்க் அகர்வால் கம்பேக்
இறுதியாக 249 ரன்களில் இருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ரஞ்சி டிராபி தொடரில் 82.50 சராசரியுடன் 990 ரன்களை மயங்க் அகர்வால் குவித்துள்ளார். இருப்பினும் அரையிறுதியில் கர்நாடகா அணி தோல்வியை சந்தித்தது. மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளதால், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மயங்க் அகர்வால் இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராகுலுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











