துவக்கம் சொதப்பல்
மும்பை நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும், வாட்சன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறும் போது சென்னை 6 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தவித்து வந்தது.
மிடில் ஆர்டரில் அழுத்தம்
இதனால், மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட அவர்கள் விக்கெட் விழாமல் இருக்க நிதான ஆட்டம் ஆடினர். அதனால், மேலும் ரன் ரேட் வீழ்ந்து சென்னை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
தலைவலி
அம்பதி ராயுடு, வாட்சன் இருவரும் சென்னை அணிக்கு புதிய தலைவலியாக மாறி வருகிறார்கள். இவர்கள் ஆடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஓரளவு ரன்கள் எடுத்தனர். மற்ற மூன்று போட்டிகளிலும் அணியை கை விட்டுள்ளனர். வாட்சன் நான்கு போட்டிகளில் 0, 44, 13, 5 ரன்கள் எடுத்துள்ளார். ராயுடு நான்கு போட்டிகளில் 28, 5, 1, 0 ரன்கள் எடுத்துள்ளார்.
சிக்கல்
இவர்கள் இருவரும் அடுத்த போட்டிகளில் சுதாரிக்காவிட்டால் சென்னை அணிக்கு கடும் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே, வேகப் பந்துவீச்சில் சரியான வீரர்கள் இன்றி தவித்து வரும் சென்னை அணிக்கு துவக்க வீரர்களும் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் தான் தொடர்ந்து வெற்றி பெற முடியும்.