க்ருனால் பண்டியா ஓவர்
மும்பை - சென்னை போட்டியில் தோனிக்கே மன்கட் எச்சரிக்கை விடுத்ததால், தோனி ரசிகர்கள் இணையத்தில் பொங்கி வருகிறார்கள். சென்னை அணியின் ஜாதவ் - தோனி பேட்டிங் செய்து வந்த போது 14வது ஓவரை க்ருனால் பண்டியா வீசினார்.
பந்துவீச்சை நிறுத்தினார்
தோனி எதிர்முனையில் நின்று கொண்டு இருந்த போது, பந்துவீச வந்த க்ருனால் பண்டியா அதை நிறுத்தி விட்டு தோனி கிரீஸை விட்டு வெளியேறி விட்டாரா என பார்த்தார்.
பொங்கிய ரசிகர்கள்
தோனி க்ரீசுக்குள் பேட்டை வைத்திருந்தார். அதனால், க்ருனால் பண்டியா மீண்டும் பந்து வீசச் சென்றார். தோனி ரசிகர்கள் இது தோனிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்த்தனர். தோனி கிரீசுக்குள் தான் பேட்டை வைத்திருந்தார் என்பதால், எப்படி அவருக்கு மன்கட் எச்சரிக்கை விடலாம் என தோனி ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.
செம டோஸ்
மறுபுறம், க்ருனால் பண்டியா, தோனி கிரீசுக்குள் நிற்கிறாரா என சரி பார்க்கவே பந்துவீச்சை நிறுத்தினார் என சிலர் விளக்கம் கூறி வருகிறார்கள். இருந்தாலும், வெறி கொண்ட தோனி ரசிகர்கள், "தோனிக்கே வார்னிங்கா?" என க்ருனால் பண்டியாவுக்கு செம டோஸ் கொடுத்துள்ளார்கள்.