For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நியூஸி., தான் சாம்பியன்.. இந்தியா கதை காலி" - வாகன் டீவீட்டிற்கு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், நியூசிலாந்து தான் சாம்பியன் ஆக வேண்டிய அணி என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் துவங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, மழையால் இன்று மீண்டும் தடைப்பட்டுள்ளது.

தொடங்கியது மேட்ச்.. வீரர்களுக்கு கோலி கொடுத்த தொடங்கியது மேட்ச்.. வீரர்களுக்கு கோலி கொடுத்த

மழை காரணமாக இன்று நடக்க வேண்டிய ஐந்தாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் இன்னும் தொடங்கவில்லை. தொடர்ந்து அங்கு சாரல் மழை பெய்து வருகிறது.

ஒன்லி 2 விக்கெட்

ஒன்லி 2 விக்கெட்

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஐந்தாம் நாள் தாமதம்

ஐந்தாம் நாள் தாமதம்

இந்த சூழலில் நான்காம் நாளான நேற்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால் போட்டி தொடங்கப்படவில்லை.

திட்டமிட்டப்படி நடக்குமா?

திட்டமிட்டப்படி நடக்குமா?

ஏற்கனவே, முதல் நாள் ஆட்டம் ரத்து. நான்காம் நாள் ஆட்டம் ரத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் வானிலை காரணமாக சீக்கிரமாக முடித்துக் கொள்ளப்பட்டது என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஒட்டுமொத்தமாக 180 ஓவர்கள் கூட முழுதாக நடக்கவில்லை. இந்த நிலையில் தான் இன்று ஐந்தாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டப்படி நடைபெறுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.

மைக்கேல் வாகன் ட்வீட்

மைக்கேல் வாகன் ட்வீட்

இந்த பரபரப்பான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வடக்கே நடந்திருந்தால், ஒரு ஓவர் கூட பாதிக்கப்பட்டிருக்காது. இந்நேரத்துக்கு நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே, பைனலில் நியூசிலாந்து தான் வெற்றிப் பெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் வாகன். அதையே சற்று காட்டமாக கூறிவருகிறார். காரணம், அவர் எந்த கருத்து சொன்னாலும், இந்திய ரசிகர்கள் அவரை வச்சு செய்வது தான். அதுபோலத் தான் இன்றும் அவரது டீவீட்டுக்கு ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Story first published: Tuesday, June 22, 2021, 16:49 [IST]
Other articles published on Jun 22, 2021
English summary
michael vaughan latest tweet on wtc final - மைக்கேல் வாகன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X