ராவல்பிண்டி: பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் வினோதமான முறையில் ஹிட் விக்கெட் ஆன போதிலும், நடுவரின் தீர்ப்பால் ஆட்டமிழக்காமல் தப்பினார். கிரிக்கெட்டின் எம்சிசி விதி 35.2 அவருக்குப் பாதுகாப்பாக அமைந்ததையடுத்து, தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஒரு வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், தனது பேட்டால் ஸ்டம்பை தட்டிவிட்ட போதிலும், ஆட்டமிழக்கவில்லை என நடுவர் அறிவித்தது தென்னாப்பிரிக்க வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆட்டத்தின் இறுதி ஓவரை தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜ் வீசினார். அதை எதிர்கொண்ட ரிஸ்வான், எக்ஸ்ட்ரா கவர் திசையில் பந்தை தட்டிவிட்டார். பந்து ஃபீல்டரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிலையில், ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்க முயற்சிக்காமல், தனது கிரீஸை விட்டு இயல்பாக நடந்து செல்ல முற்பட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, அவரது பேட் ஸ்டம்பின் மீது பட்டு பெயில்ஸை தள்ளிவிட்டது. இதைக் கண்ட தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் மற்றும் அருகிலிருந்த வீரர்கள் உடனடியாக 'ஹிட் விக்கெட்' என நடுவரிடம் ஆவேசமாக முறையிட்டனர். கள நடுவரான ஷர்ஃபுத்துல்லாவுடன் அவர்கள் காரசாரமான விவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனால், நடுவர் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து, ரிஸ்வான் ஆட்டமிழக்கவில்லை என்று தீர்ப்பளித்தார்.
தொலைக்காட்சி ரீப்ளேக்களில், ஃபீல்டர் பந்தை எடுத்து வீசுவதற்கு முன்பே ரிஸ்வான் ஸ்டம்பை தட்டியது தெரிந்தது. இதனால், தென்னாப்பிரிக்காவின் முறையீட்டில் நியாயம் இருப்பதாகப் பலரும் கருதினர். இருப்பினும், நடுவர் அந்தப் பந்து வீசப்பட்டவுடன் 'ஓவர்' என அறிவித்துவிட்டதாலும், கிரிக்கெட்டின் முக்கிய விதியான எம்சிசி விதி 35.2 ரிஸ்வானுக்குச் சாதகமாக இருந்ததாலும் அவர் ஆட்டமிழக்கவில்லை.
எம்சிசியின் விதி 35.2-இன் படி, ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் செயலை முழுமையாக முடித்த பிறகு, அவரது ஸ்டம்ப் பெயில்ஸ் விழுந்தால் அது 'ஹிட் விக்கெட்' ஆகாது. குறிப்பாக, பின்வரும் சூழல்களில் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட மாட்டார்:
IND vs AUS: அடிலெய்டு இந்தியாவின் கோட்டை.. 17 வருடங்களாகத் தோல்வியே இல்லை.. ஆஸ்திரேலியாவுக்கு சவால்
ரிஸ்வானின் விஷயத்தில், அவர் பந்தை எதிர்கொண்டு தனது ஷாட்டை முடித்துவிட்டார். அதன் பிறகு ரன் ஓட எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர் இயல்பாக நடந்து செல்லும்போதுதான் பேட் ஸ்டம்பில் பட்டது. எனவே, அவர் பந்தை எதிர்கொள்ளும் செயல் முடிந்துவிட்டதால், விதி 35.2-இன்படி அவர் ஆட்டமிழக்கவில்லை என நடுவர் தீர்ப்பளித்தார். பந்து ஆட்டத்தில் (in play) இருந்தபோதிலும், பேட்ஸ்மேனின் செயல்பாடு முடிந்துவிட்டதால், இந்த விதி அவருக்குப் பாதுகாப்பாக அமைந்தது.