வீட்டு முன்பு கார்
இந்த நிலையில் இரு தினங்கள் முன்பு மனைவி, தனது மகளுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் வீடு திரும்பினார். வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக காரை நிறுத்தியுள்ளார் டிரைவர். கட்டிட கேட்டை திறக்க ஊழியர் வந்துள்ளார்.
குடிபோதை
இந்த நிலையில், ஷமி காருக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், வெகுநேரமாக கார் அங்கேயே நிற்பதால் தங்களால் நகர முடியவில்லை என கூறி ஷமி கார் டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர். அந்த இளைஞர்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது.
ஷமி மீது தாக்குதல்
இதையடுத்து ஷமி காரிலிருந்து இறங்கி, அவர்களை விலகிப்போகச்சொன்னார். ஆனால் அந்த இளைஞர்கள் ஷமியை தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற டிரைவரையும், கட்டிட ஊழியரையும் கூட அவர்கள் தாக்கியுள்ளனர். மனைவி, மகள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
போலீஸ் நடவடிக்கை
இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது ஷமி, ஏரியாவிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். இதையடுத்து போலீசார், அந்த வாலிபர்கள் மூவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.