திருப்புமுனை
கேட்ச்களை பிடித்தால், அது உங்களுக்கு போட்டியை வென்று தரும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவது உண்டு. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் 48 பந்துகளில் சதம் விளாசினார். அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில் கடைசி பந்தில் ரூசோவ் கொடுத்த கேட்சை முகமது சிராஜ் தவறவிட, அது சிக்சராக மாறியது.
சதமாக மாறியது
இதனால் கடுப்பான அஸ்வின் ஏதும் சொல்லாமல் போய்விட்டார். அப்போது ரூசோவ் வெறும் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதற்கு பிறகு அவர் 76 ரன்கள் கூடுதலாக சேர்த்தார். இது ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. டி20 கிரிக்கெட்டில் ஒரு ரன்களை நாம் எடுக்கவிடாமல் தடுத்தாலே, அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மீண்டும் கேட்ச் மிஸ்
இந்த நிலையில், தீபக் சாஹர் வீசிய 19.5வது ஓவரில் டேவிட் மில்லர் ஒரு பெரிய ஷாட் அடித்தார். அப்போது எல்லை கோட்டில் நின்று கொண்டு இருந்த முகமது சிராஜ் கேட்ச் பிடித்தார். ஆனால் பந்தை சிக்சர் லைனில் வைத்தார். இதனால், அது சிக்சர் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடுப்பான தீபக் சாஹர் அவரை ஹிந்தியில் அசிங்கமாக திட்டினார்.
24 ரன்கள்
இதனால் கடைசி ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் தீபக் சாஹரின் பந்துவீச்சு எண்கள் மோசமானது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தால், அதற்கு முக்கிய காரணமாக முகமது சிராஜின் 2 தவறுகள் தான் முதல் காரணமாக இருக்கும்.