
சிறப்பான பயிற்சிகள்
ஐபிஎல் 2020 தொடர் தற்போதுதான் முடிந்தது போல உள்ளது. ஆனால் அடுத்ததாக 2021 தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதற்கென 8 ஐபிஎல் அணிகளும் தயாராக உள்ளன. மேலும் அதன் வீரர்களும் சிறப்பாக தங்களது பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் துவக்கத்திற்கான தேதியை பிசிசிஐ அறிவிப்பதற்கு முன்னதாகவே சிஎஸ்கே அணி சென்னையில் தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சென்னையில் கடந்த சில தினங்களாக அதன் பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. இதில் தோனி, ருதுராஜ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் பயிற்சி
இந்நிலையில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாததால் தற்போது சிஎஸ்கேவின் பயிற்சி முகாம்கள் மும்பைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அணி வீரர்கள் மும்பை சென்றனர். இதையடுத்து நேற்று முதல் அணியின் பயிற்சி முகாம்கள் மும்பையில் துவங்கியுள்ளது.

குவாரன்டைனில் ஜடேஜா
இந்த முகாமில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ், ராயுடு, புஜாரா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. தனது பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார். இதையடுத்து அவரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











