துபை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடப்பாண்டு ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டனாக டோணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐசிசி விருதை டோணிக்கு அறிவித்ததுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளையும் அறிவித்தது ஐசிசி. இந்திய அணியில் டோணியைத் தவிர, ஜடேஜா, ஷிகாத் தவான் ஆகியோர் ஒருநாள் போட்டி அணியில் இடம்பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து அம்லா, டிவில்லியர்ஸ், பாகிஸ்தான் அணியில் இருந்து அஜ்மல், இங்கிலாந்து அணியில் இருந்து ஆண்டர்சன் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி அணியில் தொடர்ந்து 6வது முறையாக டோணி இடம்பிடித்திருக்கிறார்.
டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்தின் குக் கேப்டனாக இருப்பார். இதில் இந்தியாவின் புஜாரா இடம்பெற்றுள்ளார். 12வது வீரராக இந்தியாவின் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.