
தொடர் வெற்றி பெற்றாலும்
முதலில் ஆஸ்திரேலியாவில் 3-0 என்ற கணக்கில் டுவென்டி 20 தொடரை இந்தியா வென்றது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. கேப்டனாக இது டோணிக்கு மகிழ்ச்சியே என்றாலும் கூட ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு நெருக்கடி இன்னும் விலகவில்லை.

கீப்பிங் கூட ஓகேதான்
கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகவே செயல்படுகிறார் டோணி. ஆனால் பேட்ஸ்மேனாக அவரது அதிரடி பார்ம் இப்போது மிஸ்ஸிங். அதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.

எங்கே எங்கள் டோணி!
இலங்கைக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி எங்கே எங்களது அதிரடி டோணி, எங்கே உங்களது ஹெலிகாப்டர் ஷாட் என்பதுதான்.

கடலுக்குக் கீழே இருந்து எப்படி அடிப்பது!
இதுகுறித்து டோணி ஜாலியாக கூறுகையில், கடலுக்கு கீழோ அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளேயே இருந்து கொண்டு எப்படி பறக்க முடியும். அதேபோலத்தான் பவுன்சர் பந்தில் என்னால் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முடியாது.

ஸ்டூல் போட்டு வேணும்னா அடிக்கலாம்
வேண்டும் என்றால் ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்று கொண்டு வேண்டுமானால் அடிக்க முயற்சிக்கலாம். இப்போது உள்ள பவுலர்களிடம் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது கஷ்டம்.

சிக்ஸ் அடிக்காட்டி என்ன பாஸ்!
சிக்ஸர்கள் அடிக்காவிட்டால் உடனே ஓய்வு பெற்று விட வேண்டும் என்று யாரும் கூறக் கூடாது. சிக்ஸர் அடிக்காவிட்டால் ஓய்வு பெற்று விட வேண்டுமா.

பிட்டாதான் இருக்கேன்
நான் இன்னும் பிட்டாகத்தான் இருக்கிறேன். எனது வேலையை சரியாகவும் செய்கிறேன். என்னை ஓய்வு பெறச் சொல்ல முடியாது. சிலருக்கு நான் ஓய்வு பெற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் சரியாக விளையாடுவதாக கருதுவதால் அதைப் பற்றி நான் யோசிக்க முடியாது என்றார் அவர்.

ஆசியா கோப்பை
அடுத்து வங்கதேசத்தில் பிப்ரவரி 24ம் தேதி ஆசியா கோப்பைப் போட்டித் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசியா கோப்பைப் போட்டிகளும் டுவென்டி 20 போட்டிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











