
இந்திய அணி
இந்திய அணியில் தற்போது சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எல்லாம் அணியில் எடுக்கும் விருப்பம் முன்பு கோலிக்கு இல்லை. முதலில் ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவே கோலி விரும்பினார்.

எப்படி
இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் கோலி நினைத்தது போல சஞ்சு, ஷ்ரேயாஸ் இரண்டு பேருமே பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை, ஜடேஜா, பாண்டியா மட்டுமே இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் காப்பாற்றினார்கள்.

மும்பை வீரர்கள்
இந்த நிலையில் தற்போது வேறு வழியின்றி சூர்ய குமார் யாவிற்கும், இஷான் கிஷானுக்கும் கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். இரண்டு பேருமே முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடி வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அறிமுகம்
தான் அறிமுகப்படுத்திய வீரர்கள் சரியாக ஆடாத காரணத்தால் கோலி இவர்கள் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறார். ரோஹித் சர்மா மூலம்தான் இந்திய அணிக்குள் பும்ரா, பாண்டியா இரண்டு பேருமே வந்தனர். இந்த நிலையில் மீண்டும் மும்பை வீரர்கள் இந்திய அணிக்குள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

ஈகோ
தொடக்கத்தில் ஈகோ காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை கோலி தவிர்த்து வந்தார். ஆனால் தற்போது கோலியும் கூட இவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். 2021 உலகக் கோப்பை தொடர் வருவதால் நல்ல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க கோலி முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











